Wednesday, September 15, 2010

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். இத்தாக்குதலுக்கு முதல் குறியாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை எடுத்துக் கொண்டு இஸ்லாம் பெண்களை பர்தா அணியுமாறு செய்து கேவலப்படுத்துகின்றது என்று மேற்கத்திய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும், உலகில் பிரபலமாக உள்ள இஸ்லாத்தின் எதிரிகளுடைய மீடியாக்களின் வாயிலாகவும் பகிரங்கமாக பொய் குற்றம்சாட்டி வருகின்றனர். இறைவனருளால் நமது மாக்கத்தின் அறிஞர்கள் பலர் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இனி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் யார்வை என்று பாப்போம். இஸ்லாத்திற்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும்,  சொத்துரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே பெண்களை: -

  • கண்ணியப் படுத்தி கௌரவித்தது
  • சொத்துரிமை வழங்கியது
  • சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்:-
பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசியத்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணியவேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்குகின்றான்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக:
  • அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;
  • தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
  • தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;
  • இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
  • மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
  • மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
  • மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்?
பெண்கள் பர்தா அணிவதற்கான காரணத்தையும் அல்லாஹ்வே விளக்குகின்றான்.
  • நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;
  • அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
  • மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.  (அல் குஆன் 33:59)
பெண்கள் பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள்:
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் பர்தா அணிவதன் பயன்களாக கூறுகிறான்: -
  1. பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
  2. தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும்.
நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.
பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.
பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய காலகட்டத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும், மேலும் கற்பழிப்பு, கொலை மற்றும்  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கின்றது. இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.
இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.
Source : சுவனத்தென்றல்

6 comments:

  1. ஐயா (அதிரை ஒருங்கினப்பு பதிவரே); எக்பிரஸ் மனசுமாதிரி எழுத்துக்கள் சின்னதாக இல்லாம பெருசு படுத்தினா என்னா ! எழுத்தைதான் சொன்னேன் செய்தியை அல்ல, புரிந்து கொண்டால் நல்லது

    ReplyDelete
  2. அய்யா adiraiXpress அவர்களே..உங்களது பார்வையை விரிவாக்குங்கள்...எல்லாம் சரியாகத்தெரியும்..இது போட்டிக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ அல்ல..எமது கருத்துக்களை எமது பார்வையில் சொல்வதற்காக...! உங்கள் விமர்சனங்களை பதியுங்கள்..ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்...ஏற்றுகொள்கிறோம்..நன்றி..
    குறிப்பு..: சு.மு. க என்றால் சுகாதார முன்னேற்றகழகம் என்றுதான் அர்த்தம்..நீங்கள் நினைக்கும் அர்த்தம் ஏதும் இல்லை..

    ReplyDelete
  3. விரிந்த பார்வைக்கும் எழுத்துச் சுருக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரல்ல நீங்கள் ஆதலால் சொல்லப்பட்டது (சுட்டிக்கட்டத்தான்) அதற்கான ஏன் இப்படி பார்வை விரிவாக்கப் பதிலென்றுதான் புரியவில்லை.. அதெப்படி சு.மு.க வுக்கு நான் ஒரு அர்த்தம் கொண்டதாக சொல்றீங்க ? அப்படின்னா உங்கள் உள்நோக்கமும் அதுதானா ? நல்லததை நல்லதாக பார்ப்போம் !

    ReplyDelete
  4. ரொம்பவும் தயாராகத்தான் இருக்கிறீர்கள்..:)
    சு.மு.க விற்கான முழு பெயர் உங்களுக்கும் தெரியும். அதற்கான வேறொரு அர்த்தத்தை மற்றவர்கள் பேசிக்கொள்வதும் உங்களுக்கும் தெரியும். அதனால்தான் அந்த பதில்..
    ஆரோக்கியமான விவாதத்திற்கு எப்போதுமே தயார்..நன்றி..

    ReplyDelete
  5. athiraiXpress said...
    ஐயா (அதிரை ஒருங்கினப்பு பதிவரே); எக்பிரஸ் மனசுமாதிரி எழுத்துக்கள் சின்னதாக இல்லாம பெருசு படுத்தினா என்னா ! எழுத்தைதான் சொன்னேன் செய்தியை அல்ல, புரிந்து கொண்டால் நல்லது
    September 15, 2010 10:53 AM

    மீண்டும் வாசிக்கவும் (தெளிவான சிந்தனையோடு).

    நிஜம் : அதிரையூனிட்டிபோ*ஸ்*ட்*டில் ஆக்கம் தரமாக இருக்கட்டும்

    ReplyDelete
  6. Adirai Unity Post said...
    ரொம்பவும் தயாராகத்தான் இருக்கிறீர்கள்..:)
    சு.மு.க விற்கான முழு பெயர் உங்களுக்கும் தெரியும். அதற்கான வேறொரு அர்த்தத்தை மற்றவர்கள் பேசிக்கொள்வதும் உங்களுக்கும் தெரியும்.

    உண்மை : சு.மு.க. என்றொரு கழகம் எங்கே இருக்கிறது அதன் விரிவாக்கம் (பார்வையல்ல) என்னானு இந்தப் பதிவுக்கு முன்னர் நான் கேட்காத வரை தெரியாது.

    ஏன்னா பார்வைக் கோளாறுன்னு சொல்லிடக் கூடாது பாருங்க.

    சில கேள்விகளில் (இன்று மட்டும்) ஒன்று :

    ஒருங்கினைப்பு unityன்னு சொல்வது எல்லாத் தெருக்களையும் தானே ? அல்லது அதிரை(ஊருக்குள் ஓடாத)எக்ஸ்பிரஸில் ஏறியிருக்கும் தெருக்கள் மட்டும்தானா ?

    ReplyDelete