Tuesday, September 21, 2010

செல்போன் மூலம் கிடைக்கும் தொல்லைகள் – கவனம் தேவை


செல்போன் மூலம் குறிப்பாக பெண்களுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன.
திறந்த வெளiயில் குளiப்பவர்களை ஜாலியாக செல்போல் மூலம் விடியோ, போட்டோ எடுப்பதை சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. இப்போது குடியிருக்கும் வீட்டில் தனியாக இருப்பவர்களை அதுவும் காவல்துறையில் பணிப்புரியும் காமூகன் படம், விடியோ எடுத்து மிரட்டி பணம் பறிந்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள், பள்ளi, கல்லு\ரி படிக்கும் பெண்களுக்கு அதிக அளவில் இந்த செல் போன் மூலம் பல தொல்லைகள் வருகின்றன. இதற்கு நாம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் நம்முடைய சுயதகவலை பொதுவில் யாரிடமும் கொடுக்க கூடாது.
மொத்தத்தில் செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனம் தேவை. இதனால் நாளை உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் பிரச்சனைகளை தெரிந்தோ அல்லது தெரியாமல் சந்திக்க நேரிடும்.


-- http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84796
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியளறையில் பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் சலீம் மனைவி நசீராபானு(32). ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்தாகி தனியாக உள்ளார். இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலை சேர்ந்த நாகராஜ் என்பவர், கடந்த 2008ல் குளியளறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார்.

இதை காட்டி மிரட்டிய நாகராஜ், பலமுறை தகாத முறையில் நடந்துள்ளார்.இதை அவரது நண்பர்களான பரமக்குடியை சேர்ந்த தர்மா மற்றும் சுப்பிரமணியனிடம் கூறி உள்ளார். இதன்பின் இவர்கள் மூவரும் சேர்ந்து , நசீராபானுவை வீடியோ படம் எடுத்து மிரட்டி 5 லட்சம் ரூபாய் , 18பவுன் நகையை அபகரித்துள்ளனர். இந்நிலையில், வீடியோ "சிடி' யை கேட்பதற்காக நாகராஜ் வீட்டிற்கு சென்ற நசீராபானுவிடம்,அவரது மனைவி நாகவள்ளி, தந்தை மதியழகன் சேர்ந்து 10ஆயிரம் ரூபாய் கொடுத்தால்" சிடி'யை தருவதாக கூற, அந்த பணத்ததையும் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கொடுத்த" சிடி'டூப்ளிக்கட் என தெரிய வர,மனமுடைந்த நசீராபானு, பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் செய்தார். அதன்படி போலீசார் பெண்ணை மானபங்கப்படுத்தி மிரட்டி பணம் பறித்த நாகராஜ் உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
Thanks : Dinamalar

No comments:

Post a Comment