Thursday, January 20, 2011

மத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை அறிவிப்பு


மத்திய அரசு வழங்கும் கல்லூரி  மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள்  துறை நேற்று அறிவித்தது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள  செய்தி,
கல்லூரி பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. 2010-2011 ம் கல்வி ஆண்டில் அரசால் அங்கீகரிகப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மாணவ- மாணவிகள் உதவி தொகை பெற விண்ணபிக்கலாம்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/- மும் முதுகலை படிப்பு படிக்கும் போது  மாதம் ரூபாய் 2000/- மும் வழங்கப்படும்.  மருத்துவம் மற்றும் எஞ்சினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பாக இருந்தால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/-மும், எஞ்சிய ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 2000/-மும் பெறலாம் . ஒரு கல்வி ஆண்டில் பத்து(10) மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
மாநில பள்ளி தேர்வு வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4883 ஆகும். இதில் 50% மாணவர்களுக்கும், 50% மாணவிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட +2தேர்வில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப  ஆண்டு வருமானம் 4,50,000குள் இருக்க வேண்டும் .
+2 தேர்வு எண்ணை  தேர்வுத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றவர்கள்  மட்டுமே விண்ணப்பதை டவுன்லோட் செய்ய முடியும். விண்ணப்பதை தேதி முதல் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் இம்மாதம் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இணை இயக்குனர்(மேல்நிலை)
அரசு தேர்வுகள் இயக்கம்
டி.பி.ஐ வளாகம்
டி.பி.ஐ கல்லூரி சாலை,
சென்னை-600 006
அவ்வாறு அனுப்பும் தபாலின் மேல் ” கல்லூரி -பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டம்-” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தபால் துறை  மூலம் மட்டுமே விண்ணப்பங்களை  சமர்பிக்க வேண்டும்

PNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய


பயணிகள் தங்கள் 10 இலக்க PNR எண்ணைக் குறிப்பிட்டு, 97733 00000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் மொபைல் போனுக்கு நிமிடத்தில் வந்து சேரும். இந்த வசதியை இந்திய ரயில்வேயுடன் இணைந்து கூகிள் வழங்குகிறது. 97733 00000என்ற Mobile எண்ணுக்கு SMS மட்டும் அனுப்பினால் போதுமானது. 0 அல்லது +91 என்ற எண்கள் சேர்த்து அனுப்பத் தேவையில்லை.  இந்த சேவைக்கு சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான சாதாரண கட்டணம்தான். அதிகபட்சம் ரூபாய் 1 மட்டுமே.

சிறுபான்மை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி


MS Office with C ,C++, MS Office with Tally, 10 -வது பாஸ்/பெயில் ஆன
10500  பேருக்கு 
.Tamilnadu Minorities Economic DevelopmentCorporation, and
807, Anna Salai, 5th Floor, Chennai 600 002.
நேரிலோ தபால் மூலமோ 
www.tamco.in, இணைய தளத்திலும்விண்ணப்பங்களை                                                                                                                                                  amp; nbsp;                                    Backward Classes .and Minorities Welfare Department
தொலைபேசி எண்:04365 -251562  ல் பெறலாம் .
--குடந்தை பேராசிரியர் உசேன் .

Thursday, January 13, 2011

சுவாமி அசீமனந்தாவின்  மனம் மாற்றிய அப்துல் கலீம்:
கடந்த 2007-ம் ஆண்டில் 68 பேரின் உயிரைப் பலிகொண்ட  சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்  ரயில் குண்டு வெடிப்பு சம்பவம்  நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மாலேகன் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தை - நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் அப்துல் கலீம் என்ற 21 வயது முஸ்லிம் வாலிபர் என்பதை எத்தனை பேர் அறிவோம்?.  
சுவாமி அசீமானந்தா நவம்பர் 2010-ல் மக்கா மஸ்ஜித் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர மநிலம் ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்குடா மாவட்ட சிறைச்சலையில் அடைக்கப்பட்ட பொழுது அந்த வியத்தகு சம்பவம் நடந்தது. அவர் அடைக்கப்பட்ட சிறையில்தான் - மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட  அப்துல் கலீமும் அடைக்கப்பட்டிருந்தார். ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பரிச்சயம் நட்பாக மாறியது. 
அப்துல் கலீம் - வயோதிகரான சுவாமிக்கு தேவையான உணவு- குடிநீர் பொன்றவைகளை பெற்றுத் தந்து  உதவி வந்தார். அவ்வாறு உதவி வந்த இளைஞனிடம் ஏதேச்சையாக ஒருநாள் கலீமின் சிறைத்தண்டனைக்கு காரணம் என்னவென்று சுவாமி ஒருநாள் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞன் அளித்த பதில்தான் - சங்பரிவாரால் மழுங்கடிக்கப்பட்ட 'மனிதநேய' உணர்வை மீண்டும் அந்தச்சுவாமியில் மனதில் கிளர்ந்தெழச் செய்தது.
அப்துல் கலீம், தான் கடந்த ஒன்றரை அண்டு காலமாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டு -  கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படிருப்பதாகவும் - மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை  செல்போன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை  காப்பாற்றி வந்ததாகவும் - அவர் சிறைக்கு வந்தபிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும்  கூறியிருக்கிறார். அதைக்கேட்ட அசீமானந்தா சிந்திக்க தொடங்கினார் - அவரின்  மனசாட்சி 'அப்துல் கலீம்' போன்ற இளகிய மனம் படைத்த அப்பாவி இளைஞனின் சிறைத்தண்டனைக்கு காரணமாகிவிட்டோமே என்று  உறுத்த ஆரம்பித்துவிட்டது. 
மதக்காழ்ப்புணர்ச்சியோ - வெறுப்புணர்ச்சியோ காட்டாமல் - ஹிந்து சுவாமியான தனக்கு - அப்துல் கலீம்  செய்த பணிவிடைகளை எண்ணிப்பார்த்த சுவாமி அசீமனந்தா - மனம் வருந்தினார். தான் செய்த தவறுக்கு 'பிரயசித்தம்' தேடிக்கொள்வது' என்றும் - வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான உண்மைக்குற்றவாளிகள் தண்டனை பெற்றே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார்.  மேற்கண்ட சம்பவங்களை கடந்த டிசம்பர் 18 அன்று - டெல்லி மாஜிஸ்ட்டிரேட் முன்னிலை சுவாமி அசீமானந்தா அளித்த 42 பக்க வாக்கு மூலத்தில் கூறியுள்ளாராம்.
சுவாமி அசீமனந்தாவின் ஒப்புதல் வக்குமூலத்திற்கு மிகமுக்கிய கரணியாக விளங்கிய அப்துல் கலீம் பற்றி - பிரபல புலனாய்வு ஏடானா 'தெஹல்கா'  (படிக்க ) மட்டும் வெளியிட்டது ஆனால் பிரபல ஆங்கில தினசரிகளும் - தனியார் செய்தி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துவிட்டன.    

Central University Of Tamil Nadu (CUTN) Recruitment

Central University Of Tamil Nadu (CUTN) has announced and published advertisement at official website www.tiruvarur.tn.nic.in for recruitment of candidates for following jobs vacancies. Persons who are eligible and desirous for Central University Of Tamil Nadu Recruitment may download complete details and application form official websitewww.tiruvarur.tn.nic.in and apply before the last date.


Central University Of Tamil Nadu (CUTN)
Thanjavur Road, Tiruvarur – 610 001, Tamil Nadu
Vacancies for Non-teaching Positions
Notification No: CUTN – 3 (2) – 1/2011

More details about Central University Of Tamil Nadu (CUTN) Recruitment details
  1. Finance Officer : 01 Post
  2. Deputy Registrar : 02 Posts
  3. Assistant Registrar : 02 Posts
  4. Hindi Officer : 01 Post
  5. Section Officer : 02 Posts
  6. Assistant : 04 Posts
  7. Upper Division Clerk : 04 Posts
  8. Lower Division Clerk : 04 Posts
  9. Private Secretary : 03 Posts
  10. Personal Assistant : 01 Post
  11. Technical Assistant : 02 Posts
  12. Lab. Assistant : 02 Posts
  13. Assistant Librarian : 01 Post
  14. Junior. Professional Assistant : 01 Post
  15. Library Attendant : 02 Posts
  16. Lab Attendant : 02 Posts
Last Date for receiving application : 28.01.2011

 The filled in application wi th attested copies of the certificates for age proof, qualification,experience, community, non creamy-layer certificate, demand draft etc, should be addressed to the Registrar, Central University of Tamil Nadu, Thanjavur Road, Thiruvarur – 610 001

Important link: Advertisement  

More Information: For  complete information about Central University Of Tamil Nadu (CUTN) Recruitment 2011 like how to apply, selection procedure, how to apply and any other details please visit official website www.tiruvarur.tn.nic.inFor latest sarkari naukri updates and  Central University Of Tamil Nadu (CUTN) Recruitment 2011 notification direct into your email ID please

http://getsarkari-naukri.blogspot.com/

Thursday, January 6, 2011

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், "என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!" - என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம்.
அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள்.


அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே!


அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
 அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 - 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.

இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் சர்வதேச அளவில் சாதனைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி "அறிவைத்
தேடுதல்" எனும் அடிப்படை இங்கே நிருபணமாகிக் கொண்டுள்ளது.

ஆம்! கடந்த வாரத்தில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் இந்தப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி ஈரானியப் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றுள்ளனர். விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில்
கலந்து கொண்டனர்.

* சகோதரி மெஹ்ராஜ் கோல்கின்ஃபர் எனும் முஸ்லிம் பெண், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப்
பரிசை வென்றுள்ளது.

* சகோதரி சோனியா சப்ரீ அவர்களின் பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது.

* அதே சமயம் சகோதரி மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.

ஈரானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள்:
பன்னாட்டு இயற்பியல் ஒன்றியத்தால் (The International Union of Pure and Applied Physics - IUPAP) இவ்வருடத்திய சிறந்த இளம் விஞ்ஞானியாக டாக்டர். யாஸமென் ஃபர்ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 34-ஆவது சர்வதேச உயர் ஆற்றல் பெளதீக மாநாட்டில் High Energy Physics
(ICHEP2008) இதற்கான சாதனை விருதினை இவர் பெறவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 25 நாடுகளுடன் நடந்த போட்டியில் இரானின் முஸ்லிம் பெண்கள் சமர்ப்பித்தத் திட்டங்களில் வென்றவை பின்வருவாறு:
1. Mehrnaz Golchinfar: Power station without pollution for environment (Winner of the Special Jury Award)
2. Ladan Nakhaei, Saeideh Nooshzadeh and Naser Darijani: Laboratory washer device for washing non accessible points of the laboratory tools and devices.
3. Elena Horri, Mehrangiz Ebrahimi and Mohsen Horri: Washable polymer and elastic for x-ray absorption
4. Negar Mahmoodian: Automatic music stand
5. Marzieh Morselpour, Mohammad Ali jusefzadeh and Parvin Nejad Sarvari: Production of ointment and suppository of citrullus colocynthis extract to reduce blood sugar
6. Negar Molazadeh: Intelligent seat belt
7. Parvin Vasseghi, Anaheita Davoodi and Tahmasb Davoodi: Building energy management system (BEMS)
8. Soheila Kamrani and Saeed Naderian: Producing water color compounds special for use in water color painting technique on stone, as well as regular technique of water color prepared from pigments of fruits, herbal plants, food colors and powder paints
9. Sonya Saberi: (World Intellectual Property (WIPO) Award)
10. Fatemeh Soltanzadeh and Mojtaba Emamjome: The Optimization of Cement and Concrete with Usage of Oman Sea Chalky Conches
11. Samaneh Mollaghasemi, Mahtab Ahmadi and Mansoor Norooz Eidian: A device to relieve migraine pains.
12. Roghayeh Hashemi: Anti-Fertility effects of seed of cossypium herbaceum and ruta graveolens plants on adult male rats is regd
13. Hoda Jalali Nejad, Amir Jalali Nejad and Hamid Jalali Nejad: Recycling of polyethylene tare phthalate (PET) which used for water and soft drink
14. Maryam Eslami: An implement for reparation and surgery of osseous diseases in olecranon (nternational Federation of Inventors' Associations (IFIA) Award, also honored with the WIPO special emblem as the top laureate for her findings consistent with the treatment of bone and joint diseases at the 36th International Exhibition of Inventions held on April 2-6 2008,where she (photo to the right) won the first prize)
15. Mahnaz Saeedi Delcheh: Flat gelatins cover for shoes to attending high equilibrium and residence of foot ache
16. Zahra Sajjadi: Automatically system that change unpleasant air to pleasant air
17. Iman Kanani: Water Purifier/Softener
18. Sahar Sepehr: Robo School Police19. Maryam Noori: Robo traffic police20. Zeynab Abdolzahrai: Wireless Electric Skate Roller


அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகள் ஏதுமற்ற நிலையிலும், பல மேற்கத்திய நாடுகள் ஈரானின் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்கான மென்பொருள் / வன்பொருள் வாங்க பொருளியல் சார்ந்த அனுமதிகளை வழங்க மறுக்கும் சூழ்நிலைகளிலும் ஈரானின் விஞ்ஞான உற்பத்தித் திறன் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் அளிக்கும் தகவல்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோரில் 70% பெண்கள் ஆவர்.

இயற்பியல், கணிதம், மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் பல "முதன் முதலாய்" கண்டுபிடித்து சாதித்திருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் இல்லாத காரணங்களினால் இவர்களது கண்டுபிடிப்புகள், இவர்களது ஆய்வுகளைப் பின்பற்றும் மேற்கத்தியர்கள் 'கண்டுபிடித்த'தாக
அறிவிக்கப் படுகிறது.

உலகின் முதல் "பேட்டரி" தொழில்நுட்பத்தில் துவங்கி காற்றாலை மூலம் கொண்டு ஆற்றலைப் பெறுவது வரை மட்டுமில்லாமல் அல்ஜீப்ரா, வேதியியல், புவி ஈர்ப்பு விசை, ஒளியின் வேகம் ஆகிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்த ஈரான், பதிவேட்டில் தனது கண்டுபிடிப்பைப் பதிக்கத் தவறியதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளது.

காலம் கடந்து உணர்ந்தாலும், அதற்காகச் சோர்ந்து விடாமல் முயற்சி செய்து சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அரங்கில் தன்னை நிலை நிறுத்த ஈரான் முயன்று வருகிறது. நம்பிக்கை ஊட்டும் இத்தகைய விழிப்புணர்வுகள்தாம் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசியமான தேவைகளாகும்.

- அபூ ஸாலிஹா

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள...




.


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.



பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.



முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.



நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.



இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.



தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.



இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.



இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.



இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.



மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.



இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.



இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.



விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இயற்கையை நம்புங்கள் இன்பங்கள் கோடி இல்லம் தேடி வரும்