Wednesday, September 15, 2010

சம்சுல் இஸ்லாம் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..

கடந்த 13/09/2010  அன்று அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை  தேர்ந்தெடுப்பதற்கான  குழு கூடியது..
அதற்கு முன்தினம் செக்கடி பள்ளிவாசல் வளாகத்தில் அப்துல் லத்தீப் ஆலிம் அவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் புது நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக 30  பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
.
அதன்படி மரைக்கா  பள்ளிவாசலில் கூடிய அந்த குழு புதிய தலைவராக ஜனாப் உமர் அவர்களையும், பொருளாளராக ஜனாப் S.A.M . ஜமாலுதீன் அவர்களையும்,  செயலாளராக ஜனாப் ஹசன் அவர்களையும் தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர்களுக்கும், முன்னாள் செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்களுக்கும் சு மு க தலைவர் ஜனாப் அஸ்லம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

5 comments:

  1. தேர்ந்தெடுக்கப்பட்டது மரைக்காப் பள்ளியில் சால்வை போர்த்தப் படுவது செக்கடிப்பள்ளியில் !? ஏன் வேறு யாரும் (சால்வை) போர்த்தி விடவில்லையா ? அல்லது இப்போதே போர்வை சு.மு.க. வாங்கி கொடுத்து விட்டதா ? மூடி மறைக்க உண்மைகள் வெளியே வராமல் இருக்க ?

    ReplyDelete
  2. அஸ்லம் பாய் பழுத்த அரசியல்வாதியாய் மின்னுகிறார். சமூக அக்கரை கொண்டவர். நோன்பு நோற்று சுபுஹு தொழுதவுடன் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். சுமுக என்று பெயரிட்டு அவர் மேற்கொண்ட பணிகளை ஊரே மெச்சுகிறது.

    அவரைப்போன்றவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். அவர் அவசியம் காங்கிரஸில் இணைந்து சாச்சாவுடன் பணியாற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆவண செய்வாரா?

    ReplyDelete
  3. அப்படிப் போடு பாய் ஆசைப் படியே பின்னுட்டமும் வருகிறதே, கெளம்புங்க கெளம்புங்க "கை"யை பலப்படுத்த.

    அரசியலெல்லாம் சாக்கடைங்கிறதுனால் பாயோட சேவை அவசியமான தேவைதான் போங்க சு.மு.க.வின் சேவை அதிரையின் unityக்கு தேவைதானோ ?

    ReplyDelete
  4. இதனையும் பார்த்துட்டு யூனிட்டியை உருவாங்குங்க சார்

    http://athiraixpress.blogspot.com/

    ReplyDelete